வெள்ளத்தினால் இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் தஞ்சமடைந்த மக்கள்? உண்மை இதுதான் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
வெள்ளத்தினால் இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் தஞ்சமடைந்த மக்கள்? உண்மை இதுதான்  லங்காசிறி நியூஸ்

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பொதுமக்கள் தஞ்சமடைந்ததாக பகிரப்படும் புகைப்படங்கள் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.  டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 7.74 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் 798 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் வெள்ளத்தினால் வீடுகளை இழந்த மக்கள் கிரிக்கெட் திடலில் தஞ்சமடைந்துள்ளதாக பகிரப்படும் புகைப்படங்கள் பொய்யானவை என தெரிய வந்துள்ளது.  அதாவது, தலைநகர் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் திடலில் கூடாரம் அமைத்து, மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதைப் போன்று பகிரப்படும் படங்கள் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது. இர்ஷாத் இம்தியாஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் தொடர்பான செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இதற்கிடையில், 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை