பிரான்ஸில் இருந்து யாழ் வந்த இளைஞர் வெட்டிக் கொலை: சிசிடிவி-யில் சிக்கிய ஆதாரம் - லங்காசிறி நியூஸ்
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 29 வயது இளம் குடும்பஸ்தர் ராஜகுலேந்திரன் பிரிந்தன், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வடமராட்சி கரணவாய் கூடாவளவு பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்சுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில், கொலை நடந்த சம்பவ இடத்தில் இருந்து சந்தேக நபர்கள் இரண்டு பேர் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜகுலேந்திரன் பிரிந்தனை பின் தொடர்ந்து வந்த கொலை குற்றவாளிகள் அவரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட ராஜகுலேந்திரன் பிரிந்தனின் உடல் தற்போது ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
