இலங்கையில் இரண்டு வாரத்தில் 16,738 பேர் கைது: 1000 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் இரண்டு வாரத்தில் மட்டும் 16000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.இலங்கை முழுவதும் அக்டோபர் 30ம் திகதி முதல் நவம்பர் 13ம் திகதி வரை நடத்தப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 16 ஆயிரத்து 738 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பிரம்மாண்ட கைது நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 16 ஆயிரத்து 915 சோதனைகளுக்கு பிறகு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோதனைகளின் போது 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்து 15 ஆயிரத்து 632 கஞ்சா செடிகளும், 4 கிலோ 847 கிராம் குஷ் போதைப் பொருளும், 25 கிலோ 483 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 41 ஆயிரத்து 874 மாத்திரைகளும் , 36 கிலோ 176 கிராம் மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் 313 பேரை மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
