இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த நபர்: கைது செய்த மரைன் பொலிஸார் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு இலங்கையர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வந்ததை அடுத்து இன்று (13.11.2025) வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். மரைன் பொலிஸார் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி-க்கு அந்த நபர் வந்ததை பொலிஸார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் தமிழ்நாட்டிற்கு வந்ததன் நோக்கத்தை மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் அவரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
