இலங்கை மனைவியை கொல்ல முயன்ற வெளிநாட்டு கணவன்: பொலிஸாருக்கு கிடைத்த சிசிடிவி - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் மனைவியை கொலை செய்ய ஐரோப்பிய வாழ் கணவன் முயற்சித்தது வெளிவந்துள்ளது.மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் தனது இலங்கை மனைவியை கார் ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில், இத்தாலிய நாட்டவர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மனைவி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார், மனைவி மீது காரை ஏற்றி கணவன் கொல்ல முயன்றது தெரிய வந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தம்பதி திக்வெல்ல பகுதியில் ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலானது இலங்கை மனைவிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை பெண் சுற்றுலாவுக்காக வெளிநாடு சென்ற போது, அங்கு அறிமுகமான நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தம்பதியினர் இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்து வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலிய நாட்டவரும் அவரது ஓட்டுநரும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
