பீகார் தேர்தல்; 20 ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையிலான வெற்றியை என்.டி.ஏ. பெறும்: பிரதமர் மோடி
புதுடெல்லி, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நமோ செயலி வழியே பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) பெண் தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர், தேர்தலை நான் உற்றுநோக்கி வருகிறேன். என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறும். அது பெரிய அளவில் இருக்கும் என்றார். வெற்றியை பற்றி எனக்கு கேள்விகளே இல்லை. ஆனால், அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். மக்களிடையே தேசிய ஜனநாயக கூட்டணி மீது பெரிய ஆர்வம் ஏற்பட்டு உள்ளது என பெண் தொண்டர் ஒருவர் பிரதமர் மோடியுடன் உரையாடும்போது கூறினார். அதற்கு பிரதமர் மோடி, ஏழைகள், தலித்துகள், மகா தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் இடையே காணப்பட கூடிய உணர்வை அவருடைய வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன என கூறினார். கடந்த 20 ஆண்டுகளில் என்.டி.ஏ. பெற்ற வெற்றியை முறியடிக்கும் வகையிலான சாதனையை படைப்பதற்கான மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். பீகாரில், காட்டாட்சி மக்கள் படுதோல்வியை சந்திப்பார்கள் என்று பேசியுள்ளார். அவர் மகாகத்பந்தன் கூட்டணியை காட்டாட்சி என குறிப்பிட்டு வருகிறார். பெண்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் பணியை மேம்படுத்துவதுடன், அவர்களை அதிகாரம் பெற்றவர்களாகவும் ஆக்குவதற்கு என்.டி.ஏ. கூட்டணி ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
