டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு
புதுடெல்லி, கடந்த வாரம், டெல்லி அரசு செயற்கை மழை பொழியச் செய்து மாசைக் குறைக்கும் திட்டத்தை முயன்றது. ஆனால் வானிலையில் போதிய ஈரப்பதம் இல்லாத காரணத்தால் இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனால் டெல்லியில் மாசு அடர்த்தி தொடர்ந்தும் அதிகரித்தே வருகிறது. டெல்லியின் காற்று மாசுபாட்டின் மூல காரணங்களில், வாகன புகை, தொழிற்சாலைகள், மருந்து கழிவு எரிப்பு மற்றும் அண்டை மாநிலங்களில் நெற்பயிர் கொளுத்தல் போன்றவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக் காலத்திற்குப் பிறகு இந்த பிரச்சினை அங்கு தீவிரமடைந்து வருகிறது. மருத்துவர்கள் ஏற்கனவே இது சுவாசநாளப் பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்து உள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தற்காலிகமாக மாறியுள்ளன. டெல்லியில் தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது. காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும். டெல்லியில் உள்ள நொய்டா, காஜியாபாத்தில் 329-கவும், அலிப்பூரில் 421-கவும், வஜீர்பூர் மற்றும் ஜகாங்கிர்புரியில் 404-கவும், உள்ளது. காற்றின் தரம் மோசமாக உள்ளதால் தொடர்ந்து மூடுபனி நிலவி வருகிறது. நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியாக உயர்ந்தது. பருவ கால வெப்பநிலை சராசரியை விட 1.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக டெல்லி மாசுகட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
