கொழும்பில் மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்: சிறைச்சாலை ஆணையர் வேண்டுகோள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பயிலும் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 230,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அக்குரெஸ்ஸவில் உள்ள கோடபிட்டிய தேசிய பள்ளியில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆணையர் இந்த தகவலை சுட்டிக்காட்டினார். மேலும் தெற்கு மாகாணம் போதைப்பொருள் பழக்கத்தில் பெரிய நிலைக்கு தள்ளப்படும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்கு பகுதி மாகாணம் ஆனது நிழல் உலக நடவடிக்கையில் முதலிடத்தில் இருப்பதாகவும், இலங்கை சிறையில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் இளைஞர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க, அதிகாரிகளை சிவில் உடையில் நியமித்து இருப்பதாகவும், நீங்கள் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும், நீங்கள் எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு சுற்றித் திரிகிறீர்கள் என்பதை கவனித்து உங்களுக்கு தகவல் எதுவும் கிடைத்தால் உடனே தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் போதைப்பொருளுடன் யாரேனும் இருந்தால் எனது தொலைபேசி எண் 071 859 2683" என்பதை தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
