4-வது நாளாக உச்சம் கண்ட இந்திய பங்கு சந்தைகள்; சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு
மும்பை, இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்று உச்சமடைந்து காணப்பட்டன. இதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து (0.49 சதவீதம்) 84,363.37 புள்ளிகளாக இருந்தது. இன்றைய நாளில் அது 704.37 புள்ளிகள் வரை உச்சமடைந்து 84,656.56 புள்ளிகளாகவும் இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 133.30 புள்ளிகள் (0.525 சதவீதம்) உயர்ந்து 25,843.15 புள்ளிகளாக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கு இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்து உள்ளது. சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.52 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதேபோன்று பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் வங்கி, இந்திய பாரத வங்கி, டாடா கன்சல்டன்சி, டைட்டன் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவையும் லாபத்துடன் காணப்பட்டன. ஆசிய பங்கு சந்தைகளிலும் நேர்மறையான போக்கு காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலும் பங்கு சந்தைகள் லாபத்துடன் காணப்பட்டன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
