வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இலங்கை வெளிநாட்டு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பல் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு பணியகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என்று மோசடியில் ஈடுபடும் தனிநபர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால் தங்களுடைய சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது. யாரேனும் இது தொடர்பான தகவல் வைத்து இருந்தால் 0112 882228 என்ற தொலைபேசி எண் மூலம் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக புகார்கள் அதிக அளவில் வரத் தொடங்கி இருப்பதாகவும், அதில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கடந்த இரண்டு நாடுகளில், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், கிரிபத்கொடையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் துபாயில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ரூ.800,000 பெற்ற ஒரு பெண்ணும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் என குருநாகலில் ஹோட்டல் ஒன்றில் நேர்காணல் நடத்திய நபர் ஒருவரும் அடங்குவர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
