டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
புதுடெல்லி, டெல்லியை சேர்ந்த தீபக் கோடா (வயது 33) என்பவர் டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தலைமை செயலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதிய இடைவேளையின்போது தனது அலுவலகத்தின் 7-வது மாடியில் பால்கனி பகுதியில் நின்று தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே சுற்றி திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று திடீரென 7-வது மாடிக்கு தாவி குதித்து தீபக்கை கடித்து குதற தொடங்கியது. இதனால் வலியில் அலறி துடித்த தீபக் உயிர் பயத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் கை, கால்கள் உடைந்து படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் குரங்கு தாக்கிய பயத்தில் கீழே விழுந்து விட்டாரா? அல்லது தற்செயலாக நடந்து விட்டதா? என விசாரணை நடந்து வருகிறது. அரசு கட்டிடங்களில், இதுபோன்று வனவிலங்கு தாக்குதல்கள் நடைபெறுவது பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் கேள்வி எழுப்பியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
