இலங்கையில் புதிய ரூ.2000 நாணயத்தாள் அறிமுகம்: மக்கள் புழக்கத்திற்கு எப்போது வெளிவரும்? - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்ட அறிவிப்பில், சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள், படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்திற்கு வெளியே விடப்படும் என தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் திகதி மத்திய வங்கி அதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த ரூ.2000 நினைவுத் தாளை வெளியிட்டது. இந்நிலையில் உரிமம் பெற்ற வங்கிகள் பணத்தை கையாளுவதற்காக தங்கள் பண இயந்திரங்களில் புதிய ரூபாய் தாளுக்கு ஏற்றவாறான மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நடைமுறைகளின் வேகத்தை பொறுத்து, புதிய ரூபாய் 2000 நாணயத் தாளை படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அளவுத்திருத்த செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் வங்கிகள் மூலம் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கப்பெறும் என்று மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
