கச்சத்தீவு குறித்து விஜய் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்! சீமானையும் பகிரங்கமாக சாடிய அருண் சித்தார்த் - லங்காசிறி நியூஸ்
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சர்வஜன அதிகாரம் கட்சியின் அருண் சித்தார்த் கண்டித்துள்ளார். கச்சத்தீவு குறித்து விஜய் பேசியதை நாம் சர்வஜன அதிகாரம் கட்சியின் சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம். விஜய்யினுடைய இந்த மேம்போக்கான அறிக்கை கச்சத்தீவு குறித்த எந்தவிதமான ஆழமான ஆய்வுகளுமற்ற அறிக்கையாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவின் உரிமையை நிலைநாட்டுவதற்கு கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் நம்மிடம் இருக்கின்றது. இந்த கச்சத்தீவு இந்தியா நமக்கு அளித்ததல்ல; எமது உரிமையை நிலைநாட்டி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகும். கச்சத்தீவு குறித்து விஜய் பேசுவதற்கு முன்பாக அரசியல் கட்சித் தலைவராக ஆராய்ந்து பேசியிருக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும் என்றார். மேலும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசியபோது, கச்சத்தீவு எமக்குத்தான் சொந்தம் என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அத்துடன் சீமான் அவர்களின் அரசியல் ஆழமாக இல்லை. இலங்கையின் உள்நாட்டு பிணக்கினை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவது கண்கூடாக தெரிகிறது என்றும் கூறினார். மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
