இலங்கையில் போலி ஆவணங்கள் மூலம் பண மோசடி: 18 வெளிநாட்டினர் கைது - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இலங்கையில் போலி ஆவணங்களை தயாரித்து இணையவழியில் பண மோசடி செய்து வந்த 18 வெளிநாட்டினர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள், கொள்ளுப்பிட்டியின் கிரிபத்கொட பகுதியில் நடத்திய திடீர் சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 18 பேரில் 17 பேர் சீன நாட்டினர் என பொலிஸாரால் தகவல் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 62 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள், இலங்கைக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2000 சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலி ஆவணங்களை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
