இலங்கை அரசு அலுவலகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

  இலங்காசிறி
இலங்கை அரசு அலுவலகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை அரசு அலுவலகங்களின் ஏப்ரல் 15 முதல் 17 வரையிலான செயல்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அரச ஊழியர்கள் இணையவழியில் பணியாற்றுவதற்கு முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் பொதுமக்களுக்கான சேவைகளை எவ்விதத் தடையுமின்றி, வினைத்திறனான முறையில் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் குறித்த மூன்று தினங்களிலும் வழமையான அலுவலக நேரங்களில் இயங்கும் என்பதுடன், ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை