இலங்கையில் பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அழிப்பு: சுகாதார அதிகாரிகள் அதிரடி - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் மன்னாரில் பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் மன்னார் பகுதியில் பொது சுகாதார வைத்திய அதிகாரி சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய சோதனையில், காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்தியது, அழுகிய மரக்கறி பழங்கள் காட்சிப்படுத்தியது, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமல் இருந்து ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது கைப்பற்ற உணவு பொருட்கள் அழிக்கவும், 1 லட்சம் ரூபா அபராதமும் விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி, அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்துள்ளனர். பொது சுகாதார அதிகாரிகளின் மேல் குறிப்பிட்ட நடவடிக்கையின் கீழ் மொத்தமாக 13 லட்சம் ரூபா மதிப்பிலான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.மேலும் இது போன்ற சுகாதார ஆய்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
