இலங்கை அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு: நியமிக்கப்பட்ட புதிய குழு: பிரதமர் அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.பல துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்வு காண்பதற்காக இந்த ஆண்டு சம்பள ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.06ம் திகதியான இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இது தொடர்பான அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதில், சம்பள ஆணைக்குழு மூலமாக அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதிபர் சேவை பணிபுரியும் நபர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து அதிபர் சங்கங்கள் மற்றும் அதிபர்களுடன் கலந்து பேசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.முரண்பாடுகளை தொடர்ந்து ஆராய்ந்து கலந்து ஆலோசித்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இந்த அரசாங்கத்தின் கொள்கையின்படி, இந்த ஆண்டு சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் துறை மட்டுமின்றி பல துறைகளிலும் சம்பள உயர்வு வழங்கப்படாதது குறித்து நெருக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இந்த புதிய சம்பள ஆணைக்குழு மூலம் இதற்கான தீர்வை காண முயற்சிப்பதாகவும், அதில் அதிபர்களின் பிரச்சனை குறித்தும் பரிந்துரைகளை முன்வைக்க நாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
