முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்  லங்காசிறி நியூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்தவர் குமார் சங்கக்கார(Kumar sangakkara). குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல வழக்கறிஞருமான க்ஷேமா ​​சங்கக்கார(Kshema Sangakkara) இன்று மதியம் காலமாகியுள்ளார்.  க்ஷேமா ​​சங்கக்கார, குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை வழி நடத்தியுள்ளார். 1983 ஆம்ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்தின் போது, க்ஷேமா ​​சங்கக்காரவும் அவரது மனைவி குமாரியும், 35 தமிழர்களுக்கு மிகுந்த ஆபத்தில் ஏங்கல்டைன் காட்டேஜில் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. க்ஷேமா ​​சங்கக்காரவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். க்ஷேமா ​​சங்கக்காரவின் இறுதிச் சடங்குகள், மார்ச் 4, 2026 அன்று மாலை 6.00 மணிக்கு கண்டியில் உள்ள மஹைய்யாவா மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை