இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல்: காணாமல் போன 173 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் - லங்காசிறி நியூஸ்
டித்வா புயலில் சிக்கி காணாமல் போன 173 பேரை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த இலங்கையையும் டித்வா சூறாவளி மொத்தமாக புரட்டிப்போட்டது என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று. இலங்கையின் தெற்கு கடற்கரையை ஒட்டி கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி குறைந்த காற்றழுத்தமாக உருவானது பின்னர் நவம்பர் 27ம் திகதி டித்வா சூறாவளியாக மாறியது.டித்வா சூறாவளியினால் கிட்டத்தட்ட 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் டித்வா புயலினால் உயிரிழந்தனர்.அதிகமான உயிரிழப்புகள் மத்திய பகுதியான பதுளை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது. இது இலங்கையில் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்பாக பார்க்கப்படுகிறது.டித்வா புயலில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1150 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்து வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். டித்வா புயல் கடந்து சென்றாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் டித்வா புயல் மீட்பு பணிகளும் 93 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 173 பேரை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து இருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
