இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: பொலிஸார் வழங்கிய தகவல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் இளம் வயது தாய் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொனரகல - புத்தல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, மொனராகல வீதியின் நாமண்டிய பகுதியிலுள்ள வீட்டின் அறையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான இளம் வயது தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில், தீ விபத்தில் சிக்கி 29 வயதான தந்தை திலுக்ஷ மதுசங்க, 26 வயதான தாய் சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயது மகள் ஒனல்யா ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை துரதிர்ஷ்டவசமாக 26 வயது இளம் தாய் கே.டி. சுராஜே சகுந்தலா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தீக்காயமடைந்த கணவர் ஜே.எம். திலுக்ஷா மதுசங்க (29) மற்றும் மகள் ஜே.எம். ஒனல்யா (03) ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.வெல்லவாய நீதவான் பூர்ணா ஷியாமலி தலைமையில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
