மட்டக்களப்பிற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை: விவசாயிகள் கடும் பாதிப்பு - லங்காசிறி நியூஸ்
கனமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியுள்ளன. இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய காற்று சுழற்சியானது, அதே இடத்தில் தாழ்வு பகுதியாக தொடர்ந்து நீடித்து வருவதன் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்று வரும் நிலையில், கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம் பயிர்களை அறுவடை செய்து முடித்தவர்கள் அதை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
