இந்தியா பாகிஸ்தான் மோதல்: இலங்கைக்கு செல்லும் விமான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்வு - லங்காசிறி நியூஸ்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெற உள்ள நிலையில் இலங்கைக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, பிப்ரவரி 15ம் திகதி கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு தங்களது கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்த செயல் கிரிக்கெட் விளையாட்டின் மாண்பை காத்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலராலும் கூறப்படுகிறது.பாகிஸ்தான் அரசின் முடிவு வெளியான உடன், இலங்கைக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மும்பை மற்றும் சென்னையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் விமானக் கட்டணங்கள் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளன.பயணம் வெறும் 1 மணி நேரம் 20 நிமிடமாக இருந்தாலும், சென்னை ரசிகர்களிடையே நிலவும் அதீத டிக்கெட் தேவையால் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதைப்போல துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்து கொழும்பு வரும் விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
