‘சென்சார் வாரியம் மதிக்கப்பட வேண்டும்’ - சவுந்தர்யா ரஜினிகாந்த்
சென்னை, 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக 'வித் லவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அய்யோ காதலே' பாடல் வெளியாகி வைரலானது. இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வித் லவ்’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சென்சார் வாரியம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது;- “எங்கள் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற சென்சார் வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளோம். சென்சார் வாரியம் இருப்பதற்கு காரணம் உள்ளது. எந்த ரசிகர்களுக்கு எந்த படத்தை காட்ட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான ஒரு அமைப்பே சென்சார் வாரியம். சென்சார் வாரியம் மதிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். அது புதிதாக வந்த ஒரு அமைப்பு கிடையாது. இந்தியாவில் சினிமா படங்கள் சென்சார் வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது நீண்ட காலமாக தொடர்ந்து வரும் வழக்கமாகும். இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு பேச விரும்பவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
