டெல்லியில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு .. பணம் பறிக்கும் கும்பலால் பதற்றம் - வீடியோ-Shooting in Delhi in 24 hours .. Tension due to extortion gang - video

  மாலை மலர்
டெல்லியில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு .. பணம் பறிக்கும் கும்பலால் பதற்றம்  வீடியோShooting in Delhi in 24 hours .. Tension due to extortion gang  video

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக டெல்லியில் கேங் வார் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் தலைநகரில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. முதல் சம்பவத்தில் டெல்லி நரைனா பகுதியில் காவல் நிலையத்தின் அருகே உள்ள கார் ஷோ ரூமில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் விற்பனைக்கு இருந்த சொகுசு கார்கள் சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .Firing incident took place at a car showroom in West Delhi's Naraina... pic.twitter.com/m3SSF01hdxஇரண்டாவதாக டெல்லி விமான நிலையம் அருகே மஹிபல்பபூர் நகர் பகுதியில் இருக்கும் உணவகத்தில் இன்று காலை 2.30 மணியளவில் பைக்கில் வந்த 6 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பணம் கேட்டு மிரட்டி ஹோட்டல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மூன்றாவதாக இன்று காலை 9.30 மணியளவில் நாங்லோய் [Nangloi] பகுதியில் அமைந்துள்ள சுவீட் கடை ஒன்றில் பணம் கேட்டு மிரட்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. முகத்தை மூடிக்கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இந்த ஸ்வீட் ஷாப் மீது நான்கு ரவுண்டுக்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மூன்று சம்பவசங்களும் காசு கேட்டு மிரட்டுவதற்காகவே நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பல்தானா என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது.

மூலக்கதை