பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!

பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!

தொடர்ந்து ஆறு வருடங்களாக100% தேர்ச்சி

2023-24-ஆம் வருடத்திற்கான சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. அதில் பஹ்ரைன் நாட்டு இந்தியன் பள்ளியில் இரண்டாம் மொழியாக தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்த தமிழ் மாணவ-மாணவிகள் தமிழில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 2018-ஆம் ஆண்டாக தமிழ் இரண்டாம் மொழியாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இந்த கல்வியாண்டு வரை 100% தேர்ச்சி தமிழில் பெற்றுள்ளது பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு
2 மாணவாகள் 98 மதிப்பெண்கள்
4 மாணவர்கள் 97 மதிப்பெண்கள்
2 மாணவர்கள் 96
மேலும்

10 முதல் 15 மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர் என்பது புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை