ஏழுமலையான் தரிசனத்துக்கு இடைத்தரகரை அணுக வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்

  தினத்தந்தி
ஏழுமலையான் தரிசனத்துக்கு இடைத்தரகரை அணுக வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்

திரு​மலை: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். இதனால், ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. இந்த நிலையில், ஏழுமலையான் தரிசனத்துக்கு இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ,திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தரு​வ​தாக கூறி, நடராஜ் நரேந்​திர குமார் மற்​றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்​றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்​கும்​போதெல்​லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்​ளனர். இதுதொடர்​பாக விஸ்​வ​நாத் குடும்​பத்​தினர் திரு​மலை விஜிலென்ஸ் அதி​காரிகளிடம் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், பணத்தை பெற்ற இரு​வரும் திருப்​பதி தேவஸ்​தான ஊழியர்​கள் இல்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இரு​வரும் 15-க்​கும் மேற்​பட்ட பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்​திருப்​பதும் தெரிய​வந்​தது.இதனை தொடர்ந்து இரு​வர் மீதும் காவல் நிலை​யத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. பக்​தர்​கள் யாரும் போலி தேவஸ்​தான இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்ய வேண்​டாம். தரிசனத்​துக்கோ அல்​லது தங்​கும் அறை​களுக்கோ இடைத்​தரகர்​களை நம்பி ஏமாற வேண்​டாம். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை