யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025: வெளியான முக்கிய அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
சர்வதேச புத்தக திருவிழா விரைவில் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் சார்பில் 2025ம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா விரைவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 15ம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் திகதி வரை 3 நாட்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் வைத்து நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் புத்தக திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார். புத்தக திருவிழாவை தாண்டி, இந்த 3 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
