ஐ.பி.எல். கோப்பை அல்ல.. என்னுடைய அடுத்த இலக்கு அதுதான் - ஹர்திக் பாண்ட்யா
மும்பை, பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதனால் இந்திய அணியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா, தற்போது ரோகித் தலைமையில் மீண்டும் வென்று சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் இந்தியாவுக்காக குறைந்தது 5 - 6 ஐ.சி.சி. கோப்பைகளை வெல்ல விரும்புவதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக்கோப்பையை வென்றாலும் அவையெல்லாம் தமக்குப் போதாது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் என்னுடைய வேலை குறையாக விடப்பட்டது. அன்றைய நாளில் என்னால் போட்டியை பினிஷிங் செய்ய முடியவில்லை என்பது உங்களுக்கு தெரியும். இன்றைய நாளில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளர் என்ற பெயருடன் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை எப்போதும் என்னால் முடிந்தளவுக்கு நிறைய சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல வேண்டும். 2024 டி20 உலகக் கோப்பையை வென்றபோது இத்தோடு முடியவில்லை இன்னும் 5 - 6 கோப்பைகள் எனக்கு வேண்டும் என்று சொன்னேன். அப்படி சொன்னதிலிருந்து மற்றுமொரு கோப்பையை தற்போது சேர்த்துள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. கிரிக்கெட்டில் விளையாடும் என்னுடைய பயணத்தில் எனது அணி வெற்றி பெறுகிறதா? என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமான விஷயம். இந்தியாவுக்காக வரும் காலங்களில் இது போன்ற வெற்றியை நான் விரும்புகிறேன். தற்போது சாம்பியன்ஸ் டிராபி முடிந்து விட்டது. அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை தூக்குவதே என்னுடைய அடுத்த இலக்கு" என்று கூறினார்.இவர் எதிர் வரும் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
