சயாம்-பர்மா மரண ரயில்பாதை கொடுமை: வரலாற்றுச் சான்றாகத் திகழ்ந்த கடைசி மனிதரும் காலமானார்
சிரம்பான்: சயாம் - பர்மா (இன்றைய தாய்லாந்து - மியன்மார்) மரண ரயில் பாதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடைசி மனிதராக இருந்த ஆறுமுகம் கந்தசாமி சனிக்கிழமை (நவம்பர் 9) காலமானார். அவருக்கு வயது 97.இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஜப்பானியர்களின் கொடுங்கோல் ஆட்சியின்போது சயாம் - பர்மா இடையே ரயில்பாதை அமைக்கும் பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு, வதைக்கப்பட்டதில் ஏறக்குறைய நூறாயிரம் அப்பாவித் தமிழர்கள் மாண்டுபோயினர். அப்போது, அங்கிருந்து ஏராளமானோர் தப்பித்து, நடந்தே மலேசியா சென்றுசேர்ந்தனர். அவர்களில் பலர் காலமாகிவிட்ட நிலையில், இறுதிச் சான்றாகத் திகழ்ந்த திரு ஆறுமுகம் கந்தசாமியும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுவிட்டார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3.26 மணிக்குத் திரு ஆறுமுகத்தின் உயிர்பிரிந்ததாக அவருடைய மகன் ஏ. சுதாகரன், 45, தெரிவித்தார்.“என் தந்தையாரின் மறைவால் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக, பேரப் பிள்ளைகளுக்கும் கொள்ளுப்பேரப் பிள்ளைகளுக்கும் அன்பான தாத்தாவாக அவர் விளங்கினார். அவர்தான் எங்களின் கதாநாயகன்.“16 ஆண்டுகளுக்குமுன் எங்கள் தாயார் (கல்யாணி) இறந்துவிட்ட நிலையில், எங்கள் தந்தையார் தம்மால் முடிந்த அளவிற்குத் தொடர்ந்து எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்,” என்றார் திரு சுதாகரன்.தம் தந்தையார் உற்சாகமான, நலமான மனிதர் எனக் குறிப்பிட்ட திரு சுதாகரன், கிட்டத்தட்ட 100 வயதை நெருங்கிய நிலையிலும் பல பள்ளிகளும் மாணவர்கள்முன் உரையாற்ற அவருக்கு அழைப்பு விடுத்து வந்ததாகக் கூறினார்.“97 வயதிலும் அவரது நினைவாற்றல் சற்றும் குறையவில்லை,” என்றார் திரு சுதாகரன்.திரு ஆறுமுகம் - திருவாட்டி கல்யாணி இணையர்க்கு 13 பிள்ளைகளும், 38 பேரப் பிள்ளைகளும், 21 கொள்ளுப்பேரப் பிள்ளைகளும் உள்ளனர். அஞ்சலி செலுத்துவதற்காக நெகிரி செம்பிலான் மாநிலம், லிங்கி போர்ட் டிக்சன், ருமா ரக்யாட்டில் உள்ள குடும்ப வீட்டில் திரு ஆறுமுகத்தின் நல்லுடல் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
