‘பாய் தூஜ்’ பண்டிகை: அணிலுக்கு ஆரத்தி எடுத்த இளம்பெண்

  தமிழ் முரசு
‘பாய் தூஜ்’ பண்டிகை: அணிலுக்கு ஆரத்தி எடுத்த இளம்பெண்

மும்பை: மகாராஷ்டிரா, கோவா ஆகிய பகுதிகளில் ‘பாய் தூஜ்’ என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை நாளில் தங்கள் அன்புக்குரிய சகோதரரின் நீண்ட ஆயுளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனைச் செய்வது வழக்கம். தீபாவளியைத் தொடர்ந்து அடுத்த 5 நாள்கள் கடைப்பிடிக்கப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக அவர்கள் கொண்டாடுகின்றனர்.இந்த விழாவையொட்டி இளம்பெண் ஒருவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான அணிலுக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்யும் காணொளி வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது.சகோதர பாசத்துடன் அவர் அணிலுக்கு பூஜை செய்வது இணையவாசிகளின் இதயங்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டு நாள்களில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்தக் காணொளியைக் கண்டுள்ளனர். அந்தப் பெண்ணைப் பாராட்டி பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

மூலக்கதை