நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தின் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு, அலைக்கற்றை விற்பனை நடைபெற்றுள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற 4ஜி ஏலத்தை விட இருமடங்கு அதிகமாகவும், 3ஜி ஏலத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவும் இந்த 5ஜி ஏலத்தில் தொகை கோரப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில், முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் ஜியோ’ அதிக தொகைக்கு ஏலம் கோரி, முதலிடத்தை பிடித்துள்ளது.இதற்கு அடுத்த இடங்களை, ‘பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. மொத்தம் 38 சுற்றுகள் ஏலம் நடைபெற்றன. ஏலத்தில், உத்தர பிரதேசம் கிழக்கு மண்டலத்துக்கான போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த மண்டலத்தில் 10 கோடி மொபைல் சந்தாரார்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால், இந்த இடத்தை பிடிப்பதில் ஏர்டெல் நிறுவனத்துக்கும், ஜியோவுக்கும் கடுமையான போட்டி நிலவியது.புதிய வரவான ‘அதானி’ குழுமம், அதன் தனியார் தொலைதொடர்பு ‘நெட்வொர்க்’ வசதிக்காக, ‘26 மெகா ஹெர்ட்ஸ்’ அலைக்கற்றையை இந்த ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அவை கோரிய அலைவரிசையை மத்திய அரசு, வரும் செப்.,ல் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜியை விட 5ஜி அலைவரிசை ௧௦ மடங்கு அதிக வேகமாக இருக்கும். 5ஜி இணைப்பால், ஒரு முழு சினிமாவை ஒரு சில விநாடிகளில் பதிவிறக்கலாம்.விரைவில் 5ஜி அறிமுகம் ஆக உள்ளதை அடுத்து, இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
