‘அதானி’ குழுமத்தின் வரவுசூடுபிடிக்கும் 5ஜி ஏலம்
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான, ‘அதானி குழுமம்’ 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்குபெற இருப்பதாக வந்த செய்தியை அடுத்து, ஏலம் சூடுபிடிக்கும் என சந்தை முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவன பங்குகள் விலை, வர்த்தகத்தின் இடையே 5 சதவீதம் வரை சரிவைக் கண்டது.நாட்டின் 5ஜி அலைக்கற்றையை வாங்கும் போட்டியில், ‘ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ ஆகிய மூன்று நிறுவனங்கள் களத்தில் இருந்த நிலையில், அதானி குழுமமும் போட்டியில் நுழைய உள்ளதாக தெரிவித்து உள்ளது.இருப்பினும், அதானி குழுமம் தன்னுடைய அறிக்கையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கான தனி ‘நெட்வொர்க்’ வசதிக்காக ஏலம் எடுக்க இருப்பதாகவும்; பொதுமக்களுக்கான தொலைதொடர்பு சேவைக்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், தொலைதொடர்பு சேவையில் அதானி குழுமம் நுழைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்; அதன் முதற்படியாக இந்த அறிவிப்பு வந்திருப்பதாகவும் கருதுகின்றனர்.இந்த காரணத்தால், ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை, வர்த்தகத்தின் துவக்கத்தில், கிட்டத்தட்ட 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.இம்மாதம் 26ம் தேதியன்று நடைபெற இருக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கெடுப்பதற்காக, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.துவக்கத்தில் ஏலம் மந்தமாக இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதானி நுழைந்திருப்பதை அடுத்து, போட்டி கடுமையாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
