தோல் பொருட்கள் ஏற்றுமதிதேவை அதிகரிப்பால் உயரும்
புதுடில்லி–நாட்டின் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 47 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயரும் என, தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும், உலக சந்தையில் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் கவுன்சில் தெரிவித்து உள்ளது.இது குறித்து, ஏற்றுமதி கவுன்சிலின் தலைவர் சஞ்சய் லேகா கூறியதாவது:உலக சந்தைகளில் தேவைகள் அதிகரித்து வருவது மற்றும் அரசின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர் அதாவது, 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
வரும் 2025 – 26 நிதிஆண்டில், ஏற்றுமதி 79 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என உறுதியாக நம்புகிறோம். கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 32.5 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 78.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 44.6 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
