ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம்
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் நாளையும் நடைபெறும் இக்கூட்டத்தில், வெகு சில பொருட்களுக்கான வரியில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில், அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகள் குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.இந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கான இழப்பீடு குறித்த ஆலோசனைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு காலத்துக்கான இழப்பீடு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதை தொடர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. கூட்டத்தில் 215 பொருட்களுக்கான வரியில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாது என அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் முக்கியமான இரண்டு விஷயங்கள் குறித்த பரிந்துரைகள் ஆலோசிக்கப்படலாம். முதலாவது, வரி அடுக்குகளை மாற்றுவது சம்பந்தமான மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தின் பரிந்துரைகள். அடுத்தது, குதிரை பந்தயம், சூதாட்டம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றுக்கு, அதிகபட்ச 28 சதவீத வரியை விதிப்பது குறித்த அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகள். இவை இரண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.மார்ச் 31ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகள் அனைத்தையும், மத்திய அரசு அண்மையில் முழுமையாக வழங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
