தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவு தலைவன்; அம்ரித்பாலை தேடுவது சட்டவிரோதமானது: இங்கிலாந்து குடியுரிமை பெற்ற மனைவி ஆவேசம்
அமிர்தசரஸ்: தப்பியோடிய காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் அவரது மனைவி கிரண்தீப் கவுர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அம்ரித்பாலை போலீசார் தேடி வருவது சட்டவிரோதமானது. அவரை போலீசார் கைது செய்வதை தடுக்கவிைல்லை. ஆனால் அவரை தேடுகின்ற விதம் சரியில்லை. ஒருவரை இவ்வாறு தடுத்து வைக்க முயல்வது தவறு. எக்காரணம் கொண்டும் அம்ரித்பால் சிங்கின் அமைப்பில் இருந்து நான் விலகி இருக்க மாட்டேன். அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். அவர் இருக்கும் இடம் எனக்கு தெரியாது. அவருடன் யாரும் தொடர்பில் இல்லை. எனக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று அவர் என்னிடம் கூறியிருந்தார். இவ்வாறு போலீஸ் ஒரு நாள் என்னை துரத்தும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். எங்கும் தப்பியோடவில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் இங்கு இருக்க மாட்டேன்’ என்றார். இங்கிலாந்து குடியுரிமை பெற்ற கிரண்தீப் (29), ‘வாரிஸ் பஞ்சாப் டே’ என்ற தீவிரவாத அமைப்பிற்காக வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டும் விவகாரத்தில் அவரது பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
