எதிர்க்கட்சிகள் மீது வழக்கு: 5ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
புதுடெல்லி,: ஒன்றிய அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு போடுவதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தன்னிச்சையாக பயன்படுத்துவதை கண்டித்தும்,எதிர்காலத்தில் இதுகுறித்த விதிமுறைகளை வகுக்க கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 5 ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதை விசாரிக்க உள்ளது என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.