கபில் சிபல் கேள்வி மோடி இமேஜை கெடுக்க நியமிக்கப்பட்டவர்கள் யார்?

தினகரன்  தினகரன்
கபில் சிபல் கேள்வி மோடி இமேஜை கெடுக்க நியமிக்கப்பட்டவர்கள் யார்?

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘என் நற்பெயரை கெடுக்கவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிலரை பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்’’ என காங்கிரசை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.இந்நிலையில், சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகிய மாநிலங்களவை எம்பி கபில் சிபல் நேற்று தனது டிவிட்டரில், ‘மோடியை குழிதோண்டி புதைக்க சிலர் பணம் கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆட்களை நியமித்துள்ளதாக பிரதமர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படி நியமிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புகள் அல்லது நாடு எது என்பதை பிரதமர் வெளிப்படுத்த வேண்டும். இது அரசின் ரகசியமாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரலாம்’ என கூறி உள்ளார்.

மூலக்கதை