குனோ தேசிய பூங்காவிலிருந்து வௌியேறிய சிவிங்கி புலியால் மக்கள் அச்சம்
ஷியோபூர்: இந்தியாவில் அழிந்து விட்ட இனமாக கருதப்பட்ட சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து 5 பெண், 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் இந்தியா அழைத்து வரப்பட்டன. அவை மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சாஷா என்ற பெண் சிவிங்கி புலி அண்மையில் உயிரிழந்து விட்டது. இந்நிலையில், ஓபன் என்று பெயரிடப்பட்ட ஆண் சிவிங்கி புலி குனோ தேசிய பூங்காவிலிருந்து வழிதவறி வௌியேறி, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரோ கிராமத்தின் வயல்வௌிகளில் சுற்றி திரிகிறது. வயலில் சிவிங்கி புலியை கண்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
