‘எங்க ஊருல வந்து பேசிப் பாருங்க’மிரட்டல் விடுத்த அசாம் முதல்வர் விருந்துக்கு அழைத்த கெஜ்ரிவால்

தினகரன்  தினகரன்
‘எங்க ஊருல வந்து பேசிப் பாருங்க’மிரட்டல் விடுத்த அசாம் முதல்வர் விருந்துக்கு அழைத்த கெஜ்ரிவால்

கவுகாத்தி: அசாம் சென்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவதூறு வழக்கு தொடருவதாக தனக்கு மிரட்டல் விடுத்த அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவை மதிய விருந்துக்கு அழைத்து பதிலடி தந்துள்ளார். அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘  என் மீது ஊழல் வழக்கு இருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார்.  ஏப்ரல் 2ம் தேதி அசாம் வரும் அவர் இங்கு வந்து என்னை ஊழல்வாதி என்று சொல்லட்டும். அடுத்த நாளே, மணீஷ் சிசோடியாவுக்கு  எதிராக செய்ததை போல, கெஜ்ரிவால் மீதும் அவதூறு வழக்கு தொடருவேன்’’ என சவால் விடுத்தார்.இந்நிலையில், கவுகாத்தியில் நடக்கும் ஆம் ஆத்மி பேரணியில் கலந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் இருவரும் நேற்று அசாமின் கவுகாத்திக்கு வந்தனர். அங்கு விமான நிலையத்தில் பேட்டி அளித்த கெஜ்ரிவால், ‘‘என்னை சிறையில் அடைக்கப்போவதாகவும், திரும்பிச் செல்ல விடமாட்டேன் என்றெல்லாம் மிரட்டல்கள் விடுப்பது ஒரு முதல்வருக்கு ஏற்புடையது அல்ல, அசாம் மக்கள் மிகவும் நல்லவர்கள்.  ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஹிமந்தாவை டெல்லிக்கு வருமாறு அழைக்கிறேன். என் வீட்டில் என்னுடன் தேநீர் அருந்தி, மதிய உணவு சாப்பிட வேண்டும். நான் அவருக்கு டெல்லியை சுற்றிக் காண் பிப்பேன் ’’ என்றார்.

மூலக்கதை