போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
வாஷிங்டன்: உலக வங்கித் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸ், வரும் ஜூன் மாதம் 30ம் தேதி பதவி விலக உள்ளார். இதனால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. பங்காவை எதிர்த்து வேறு எந்த நாடும் தங்கள் பிரதிநிதிகளை நிறுத்தவில்லை. எனவே, அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். இவர் 5 ஆண்டு காலத்துக்கு உலக வங்கியின் தலைவராக பதவி வகிக்க முடியும்.பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை பூர்வீகமாகக் கொண்ட அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் என்னும் பங்கு நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். அஜய் பங்காவின் தேர்வு, உலக வங்கியின் இயக்குனர் குழுவால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
