கோப்பை அறிமுகத்திற்கு ரோகித்சர்மா வராதது ஏன்?
அகமதாபாத்:16வது சீசன் ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்கும் நிலையில் நேற்று சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மாவை தவிர மற்ற 9 அணிகளின் கேப்டன்கள் கலந்துகொண்டனர். அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதனிடையே சமூக வலைதளங்களில் ரோகித் சர்மா எங்கே என்று பரவலாக கேள்விகள் எழுந்தன. இதனிடையே ரோகித் சர்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அதனால் அகமதாபாத்துக்கு அவர் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், செய்தியாளர்கள் சந்திப்பில், வர இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சில பல ஆட்டங்களில் ஓய்வளிக்கப்படும் என கூறி இருந்தார். அதன்படி அவர் பணி பளுவை குறைக்கும் வகையில் கோப்பை அறிமுகத்தில் பங்கேற்க வில்லை என தெரிகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
