கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது: கனேடிய தமிழ் காங்கிரஸ்
கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை கனேடிய அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
வருடாந்தம் தன்னார்வ அடிப்படையில்ழ 10 மில்லியன் டொலர்கள் நிதி உதவியாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த உதவியை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப் போவதில்லை எனவும், இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாமையே உதவு தொகை நிறுத்தப்பட்டமைக்கான காரணம் எனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை தடுக்க கனேடிய அரசாங்கம் எடுத்து வரும் முனைப்புக்கள் பாராட்டுக்குரியவை என கனேடிய தமிழ் காங்கிரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் முன்மாதிரியை ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளும் பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் இலங்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சர்வதேச சமூகம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் கனேடிய தமிழ் காங்கிரஸூம் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
