கனடாவில் அதிகரிக்கும் திருடர்கள்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
கனடாவில் அதிகரிக்கும் திருடர்கள்

கனடாவில் திருடர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நவீன முறையான பாணியினைக் கையாண்டு வரும் திருடர்கள், பொதுவாக எலக்ட்ரானிக் பொருட்களை திருடுவதை குறியாக உள்ளனர்.

தற்போது இத்திருடர்கள், மிசசாக்கா பிரதேசத்தை குறி வைத்துள்ளதாக தகவல் வந்ததையடுத்து பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மிசசாக்காவில் ஒரே இடத்தில் 6 வீடுகள் திருடர்களால் உடைக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தியானது அப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பீதியடையச் செய்திருக்கின்றது.

மூலக்கதை