16 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் அமீரகத்தில் அக். 17ல் தொடக்கம்: நவம்பர் 14ம் தேதி இறுதி போட்டி
துபாய்: 7வது டி. 20 உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவியதால் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த மாதம் 29ம்தேதி ஐசிசி கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவில் உலக கோப்பை டி. 20 தொடரை நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ சார்பில் ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதன்படி ஜூன் 28ம்தேதி வரை ஐசிசி தரப்பில் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. கொரோனாவின் 3வது அலை அக்டோபர், நவம்பரில் வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் அக்டோபர், நவம்பரில் மழைக்காலம் என்பதால் உலக கோப்பை டி. 20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொடர் நடந்தாலும் அதனை நடத்தும் உரிமை பிசிசிஐ வசமே இருக்கும்.
அக்டோபர் 17ம் தேதி உலக கோப்பை டி. 20 தொடர் தொடங்க உள்ளது.
16 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிபோட்டி நவம்பர் 14ம்தேதி நடைபெற உள்ளது.
தகுதி சுற்றில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓபன், பப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.
இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றில் 30 போட்டிகள் உள்ளன.
இந்த சுற்று அக்டோபர் 24ம் தேதி தொடங்க உள்ளது. 6 அணிகள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
இந்த போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற உள்ளன. சூப்பர் 12 சுற்றில், ஏ மற்றும் பி குழுவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.
தகுதி சுற்றில் சில போட்டிகள் ஓமனில் நடைபெற உள்ளது. போட்டிகள் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்த தொடர் முடிந்த 2 நாட்களில் உலக கோப்பை டி. 20 தொடர் தொடங்க உள்ளது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
