இந்தியா தனிமைப்பட்டுவிடும்! மிரட்டும் இலங்கை உயர்ஸ்தானிகர்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கும் நாடுகள், அந்த அமைப்பில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாக கருதப்படும் என்று இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் கூறினார்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காவிட்டால், அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தக் மாநாடு இலங்கைக்கானது அல்ல; காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தொடர்புடையது. அதில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் இந்திய அரசின் உரிமை.
தமிழக சட்டப்பேரவையில் இந்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பது தமிழக அரசின் உரிமை. அது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. இலங்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சரியான தகவல்களை யாரும் அளிக்கவில்லை என்று கருதுகிறேன்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்ப்பது, அந்த அமைப்பில் இருந்தே சம்பந்தப்பட்ட நாடு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும் என்றார் அவர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
