பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்க காலஅவகாசம் உள்ளது: ப. சிதம்பரம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க இன்னும் காலஅவகாசம் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிதம்பரம் பதிலளிக்கையில்,
"இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று சில மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதையும் நான் அறிவேன்.
பிரதமர் பங்கேற்பதா? இல்லையா? என்ற இறுதி முடிவு எடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது' என்று சிதம்பரம் கூறினார்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் அவரைச் சந்தித்து வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
நவம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை கொழும்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன.
மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
