இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகவும், இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வை கருத்திற்கொண்டும் இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சதீவில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா, மீனவர் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை கவனத்திற்கொண்டு இலங்கையை அணுக வேண்டியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இருநாட்டு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் துறை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்புக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்ததால் இந்த சந்திப்பு டிசம்பர் மாத இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக ஞானதேசிகன் மேலும் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
