தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க முடியாது: இலங்கை
இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக கொழும்புவிலிருந்து இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே நேற்று டெல்லி புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை - தமிழக மீனர்வர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வரும் 20-ம் திகதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
அதற்கு முன்னர் தமிழக மீனவர்களை விடுவிக்க இயலாது. இரு நாட்டு மீனவர்களும் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அவர்களை ஒரே சமயத்தில் விடுவிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததால்தான் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள்" என்றார் ரஜிதா சேனரத்னே.
முன்னதாக, தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
