இலங்கையிலுள்ள இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: தமிழக முதல்வர்
கொழும்பில் நடைபெறவுள்ள மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கை சிறையிலுள்ள 121 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் அனைவரும் சென்னைப் பேச்சுவார்தைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
