இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தை கொண்ட உணவு பொருட்களான கேக் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான வெப்ப நிலை காரணமாக இந்த உணவு பொருட்களில் உள்ள இரசாயனங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.
இதன் காரணத்தினால் அதன் தரத்துக்கு பாதிப்புகள் ஏற்பட கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எப்பொழுதும் பாதுகாப்பான முறைக்கு உட்பட்ட வகையில் உணவை மாத்திரம் பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.